search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி"

    • கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
    • காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான 5-வது கட்ட கலந்தாய்வு நாளை 19-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கனவே 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி கல்லூரியில் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வணிகவியல், சா்வதேச வணிகவியல் பாடப் பிரிவுகளில் 30 இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் (பிசிஏ) பிரிவில் 10 இடங்களுக்கும், தமிழ் இலக்கியம், பொருளியல் பாடப் பிரிவுகளில் தலா 6 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    மேலும், இயற்பியல், கணிதம்,ஆங்கில இலக்கியம், வரலாறு, கணினிஅறிவியல் (இரண்டாம்ஷிப்ட்) ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில், தரவரிசை 2001க்குப் பிறகு உள்ளவா்களும், ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவா்களும் பங்கேற்கலாம். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும்போது ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களைக்கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படங்கள், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளகிறார்கள்.

    திருப்பூர் :

    மாநில நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் பல்கலை கழகம் இணைந்து சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் சாகச முகாம் நாளை முதல் 16.7.22 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகத்திலிருந்து மொத்தம் 150 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கோவை பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து 12 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சாகச முகாமிற்கு செல்கிறார்கள். இதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் ரத்தினகணேஷ் தேர்வாகி உள்ளார். இவர் இளங்கலை வேதியியல் துறை இறுதியாண்டு படிக்கிறார். இவருக்கு பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் என்ற பெருமை உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான ஒரே மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இம் முகாமில் மாணவ மாணவிகளுக்கு சாகச பயிற்சி, நெகிலி விழிப்புணர்வு மற்றும் சுத்தம் செய்தல், மலையேற்ற பயிற்சி, காய்கறி தோட்டம் அமைத்தல், கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவனை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

    கல்லூரி முதல்வர் கூறுகையில் இது அரசு கல்லூரிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் மாணவனை தேர்வு செய்த மண்டல மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பெரியார் பல்கலை கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    ×