என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிகிச்சை பலனின்றி சாவு"
- தீக்காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கிருஷ்ணகிரியில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கிருஷ்ணகிரி அருகே சிட்கோ தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி சரஸ்வதி (வயது33). இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அடுப்பின் அருகே பாட்டிலில் இருந்த வெள்ளை மண்எண்ணை தவறி கீழே விழுந்தது. அதில் தீப்பொறி பற்றி திடீரென்று தீப்பிடித்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரஸ்வதியின் சேலையில் தீப்பற்றி அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயமடைந்தார்.
உடனே அவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தீபக் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
- சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.
கிருஷ்ணாபுரம்
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளி ரத்தினம் (வயது 27). தொழிலாளி.
இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளி ரத்தினம் தீயை அணைக்க முயன்றார்.
இதில் 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரையும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரம்யாவும் உயிரிழந்தார்.
- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி ராமசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி.
இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 48). கடந்த கார்த்திகை திருநாள் அன்று விரதம் இருந்து வழிபாடு நடத்திய உமாமகேஸ்வரி ஆடையில் எதிர்பாராத விதமாக விளக்கிலிருந்து தீ பற்றி பரவியது.
இதில் உடல் கருகிய நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட உமாமகேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்