search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்"

    • சண்முகம் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.
    • மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    பரமத்தி வேலூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக பழைய பைபாஸ் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர் :

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா பாலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாரத் வயது (39) கட்டத் தொழிலாளி கடந்த 10-ந் தேதி பேரணாம்பட்டு ஆம்பூர் சாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டன இதில் படுகாயமடைந்த பாரத் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உமராபாத் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×