search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவு"

    • இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
    • மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    ராஜாக்கமங்கலம் :

    நெல்லை மாவட்டம் இருக்கன் துறையை சேர்ந்தவர் சுப்பையா. அவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 37). இவர் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு மணல் குவாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கூடங்குளத்தில் இருந்து பிள்ளை தோப்புக்கு டெம்போவில் பாறை மண் கொண்டு வந்தார். பிள்ளை தோப்பில் மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் அவர் மயங்கி விழுந்து டெம்போக்கு உள்ளேயே இறந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியின் முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சேலம் டவுன் போலீசார் அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி தண்ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள் ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சத்தியபிரியன் (வயது 17).

    இவர் சிவகாசியில் இயங்கி வரும் தனியார் தண் ணீர் சப்ளை நிறுவனத்தில் வேலை டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் தனது பெற்றோரிடம் கூறி விட்டு வேலைக்கு சென்ற சத்தியபிரியன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு லாரியில் தண்ணீர் சப்ளை செய்வதற் காக சென்றார். மீண்டும் திரும்பிய நிலையில் திடீரென்று மயங்கி கீேழ விழுந்தார். உடனடியாக அங்கிருந்த–வர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வெயிலப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி சிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரை வரின் மர்மச்சாவு தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவர் கடந்த 25-ந் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜா இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
    • கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது

    திருச்சி, காட்டூர் பாரதிதாசன் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது45). இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் போலீசார் வைத்துள்ள இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
    • வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார்.

    நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். 70 வயது மதிக்கத்தக்க இவர் வெள்ளை நிற ரவுக்கையும், மஞ்சள் நிற சேலையும் அணிந்துள்ளார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

    இச்சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேல் விசாரணை செய்து வருகிறார்.

    • பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
    • திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார்

    திருச்சி

    திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தையல்காரர் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பஸ்சில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்
    • நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). இவர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்திரன் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இறந்து போன சந்திரனுக்கு சசிகலா (44) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருச்சி,

    சென்னை செங்கல்பட்டு மதுராந்தகம் பெரும்பாக்கம் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 44). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .

    இந்த நிலையில் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் கிஷோர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவறையில் மயங்கிய முதியவர்
    • முதியவர் திடீர் சாவு


    வேலாயுதம்பாளையம்


    கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம்பாளையம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.


    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    துறையூர் அருகே சரக்கு வாகனம் மோதி விவசாயி பரிதாப சாவு

    துறையூர் 

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நாகலாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க முயன்றார்.

    அப்பொழுது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக சக்திவேலின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக சக்திவேலின் மகள் மகாலட்சுமி (32) என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், டிரைவர் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறையூர் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×