search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவித்ரி வாழ்கை வரலாறு"

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், துல்கரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன. 

    இதில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.

    அதன்பிறகு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.



    இந்த படத்தை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்த்து பாராட்டி இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெமினி கணேசனை மோசமானவராக சித்தரித்து இருப்பதாக அவர்கள் சாடினர்.

    ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்து உள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சையாக பரவி வருகிறது. #NadigaiyarThilagam #KeerthySuresh

    தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த அட்லி படக்குழுவை பாராட்டியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
    மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

    படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அட்லியும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில் அட்லி கூறியிருப்பதாவது,



    உன்னதமான, உற்சாகமூட்டும், உயிர் காவியமான சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையை மீண்டும் உயிர் பெற வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக மாயாபசார் நடனம் மிகவும் அற்புதம். சமந்தா தம்பி நீ கலக்கிட்ட, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். மறக்க முடியாத காவியத்தை வழங்கியதற்காக வைஜெயந்தி பிலிம்சுக்கு பாராட்டுக்கள்' 

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh #Samantha

    நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, தான் துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டதாக கூறியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
    மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

    இந்த நிலையில், இன்று படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி படக்குழுவை வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், 



    `சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகையை மீண்டும் உயிர்பெற்று வர வைத்துள்ளார். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரது ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் நாக் அஸ்வின், ஸ்வப்னா, உங்களது நம்பிக்கை மற்றும் உறுதி தலைசிறந்தது' 

    இவ்வாறு கூறியிருக்கிறார். 

    வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh

    ×