search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய வியாபாரி கைது"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

    பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.
     
    குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.



    இதுகுறித்து உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான சாராய வியாபாரி பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    பேரணாம்பட்டு அருகே கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்ககோரி உறவினர்கள் போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனசரகம் அத்திபட்டு மாமரத்து என்ற இடத்தில் வனசரகர் சங்கரய்யா, வனவர்கள் வேல்முருகன், அரி மற்றும் வனத்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் 3 நபர்கள் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்க சென்றனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் கோட்டைசேரியை சேர்ந்த முரளி (38), என்பதும், அவருடன் வந்தவர்கள் அதே ஊரை சேர்ந்த ராமு (30), அனந்தகிரியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கள்ள சாராயம் காய்ச்சுவது, வனவிலங்குகள் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து முரளியை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி, பைக் மற்றும் டார்ச்லைட், கந்தக மருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் முரளியை வனத்துறையினர் வேனில் ஏற்றிகொண்டு சென்றனர். அப்போது முரளியின் உறவினர்கள் வனத்துறையின் வேனை முற்றுகையிட்டு முரளியை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முரளி துப்பாக்கியுடன் சிக்கியதால் அவரை விடுவிக்க முடியாது என கூறி கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    ×