search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி வீதி உலா நிகழ்ச்சி"

    • முக்கிய நிகழ்வாக சதாவரம் காளியம்மன் சிங்க வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • காளியம்மன் மற்றும் கீழ் காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களும் பக்தர்களுக்காக சிங்க வாகனத்தில் ஒரே சமயத்தில் காட்சியளித்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் கால பைரவர் கோவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் அருகிலேயே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் அமைந்துள்ளது.

    இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரை சுமார் 15 நாட்கள் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    தேர் திருவிழாவிற்கு முன்னதாக காளியம்மனை குலதெய்வம் ஆகும் கண் கண்ட தெய்வமாகவும் வணங்கக்கூடிய 152 கிராம மக்களுக்கு கிராமங்களுக்கு காளியம்மன் திருவீதி உலா பதினோரு நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெற்றது.

    தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் கோவில் வளாகத்தின் அருகிலேயே காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பசியாற கூழ் அமுது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூழ் அமுது 152 கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வாக சதாவரம் காளியம்மன் சிங்க வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேல் காளியம்மன் மற்றும் கீழ் காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களும் பக்தர்களுக்காக சிங்க வாகனத்தில் ஒரே சமயத்தில் காட்சியளித்தனர். கூடியிருந்த பக்தர்கள் திரளாக வழிபட்டுச் சென்றனர்.

    • அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சிறப்பு பூஜைக்கு பின்னர் மகாதீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

    நவராத்திரி நிறைவுநாள் மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் மூலவர் சோமேஸ்வரர், பார்வதிதேவி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவில் வளாகத்திலிருந்து உற்சவர் விநாயகர் வாத்திய முழக்கத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலாவாக அழைத்து செல்லப்பட்டார்.

    இதில், வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×