search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தூர் கர்ப்பிணி பெண்"

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார். அப்போது அவர், சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். #HIVBlood
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

    அப்போது அவருக்கு ரத்தசோகை குறைபாட்டை போக்க சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது.

    ரத்தம் செலுத்திய சில மணி நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கர்ப்பிணி பெண்ணின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாத்தூர், விருதுநகர் வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.

    அவரது ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்ததானம் செய்த வாலிபர், மிரட்டல்கள் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். அவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர், ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

    அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் பணியில் கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கர்ப்பிணி பெண் மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-


    ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் அவருக்கு ரத்ததானம் வழங்கிய வாலிபருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனித்தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரும் நலமாக உள்ளனர்.

    தொடர் சிகிச்சை காரணமாக எச்.ஐ.வி. நோய் தாக்கிய பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது அதிகரித்துள்ளது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையை எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

    பொதுவாக கருவில் இருக்கும் சிசுவுக்கு நோய் பரவாது. ஆனால் பிரசவத்தின் போது குழந்தைக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் கர்ப்பிணிக்கு தொடர்ச்சியாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்பிணிக்கு பிரசவம் முடிந்த பின்னரும் பிறக்கும் குழந்தைக்கு 84 நாட்கள் தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பிற்கான சிகிச்சைகள் நீடிக்கும்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியும், தற்கொலைக்கு முயன்ற வாலிபரும் மன உளைச்சலில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கும் வகையில் 2 பேரையும் மன ரீதியாக தைரியப்படுத்தி டாக்டர்களின் சிகிச்சையை எதிர்கொள்ள இந்த ஆலோசனை உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #SatturPregnantWoman
    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை பெண்ணுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #HIVBlood
    பூந்தமல்லி:

    மாங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் வியாபாரியின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

    4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

    இதையடுத்து அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் 2 யுனிட் ரத்தம் ஏற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலேயே மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.



    8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்த போது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

    9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி குழந்தை பெற்று இருக்கிறார்.

    எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.

    ஆனால் அது பற்றி யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    இந்த புகார் குறித்து எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு தலைவர் செந்தில்ராஜிடம் கேட்ட போது, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார் என்று கூறினார். #HIVBlood
    2 ஆண்டுகளாக ரத்த தானம் செய்தபோது எச்.ஐ.வி. தொற்று பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. நானாக முன்வந்தே உண்மையை கூறினேன் என்று தற்கொலைக்கு முயன்ற வாலிபர் தெரிவித்தார். #HIVBlood #PregnantWoman
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் கர்ப்பிணி மனைவியான 23 வயது பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என்பதும், அந்த ரத்தம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக கொடுத்தது எனவும் தெரியவந்தது.

    இந்த நிலையில் மருத்துவ குழுவினரும், போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். இதனால் அந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட அவர் அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கூறியதாவது:-

    சிவகாசியில் வேலை பார்த்து வந்த நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ரத்த தானம் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக ரத்த வங்கியினர் கூறவில்லை.

    அதன்பிறகு கடந்த சில மாதங்களாக நான் பெங்களூரு சென்று விட்டேன். இந்த நிலையில் உறவுப்பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் டிசம்பர் 3-ந்தேதி சிவகாசி வந்து ரத்ததானம் செய்தேன். அதனை பெற்றவர்களும் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் வெளிநாடு செல்ல திட்டமிட்டேன். அதற்காக கடந்த 8-ந்தேதி மதுரை மேலூரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது தான் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரியவந்தது.


    இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சிவகாசி சென்று அங்கு வேறு ரத்த வங்கியில் பரிசோதனை செய்தேன். அதிலும் எச்.ஐ. வி. தொற்று இருப்பது உறுதியானது.

    எனவே நானாகவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு கடந்த 10-ந்தேதி சென்று இதுபற்றி தெரிவித்தேன். நான் தானம் கொடுத்த ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்றேன். அங்கிருந்த ஊழியர்கள் உங்கள் உறவினருக்கு செலுத்தவில்லை எனக் கூறியதால் நான் வீடு திரும்பி விட்டேன்.

    இந்த சூழலில் தான் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எனது ரத்தம் வழங்கப்பட்ட விவரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    2016 முதல் ரத்தம் வழங்கிவரும் நிலையில் கடந்த 3-ந்தேதி ரத்த தானம் கொடுத்த பிறகும் சரி ரத்தவங்கி ஊழியர்கள் யாரும் எனக்கு எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

    நானாக முன்வந்தே இதனை தெரிவித்தேன். முன்பே தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்து இருக்க மாட்டேன். ஆனால் தற்போது என்னை போனில் தேடியதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. கடந்த 3-ந்தேதி கூட ரத்ததானம் செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HIVBlood #PregnantWoman
    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் அம்பலமாகி வருகிறது.#HIVBlood #PregnantWoman
    விருதுநகர்:

    ரத்த தானம் செய்த கமுதியைச் சேர்ந்த வாலிபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது 2016-ம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவரை உரிய முறையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அறிவுறுத்தவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாமலேயே இருந்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் அவர் வேறு எப்போதாவது ரத்த தானம் செய்தாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய தகவல்களை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்ய இயலவில்லை.

    அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக ரத்த பரிசோதனை செய்த போது தான் அவருக்கே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் ரத்தம் பரிசோதனை செய்த ரத்த வங்கி ஊழியர்களுக்கு முன்பே இதுபற்றி தெரிந்து இருந்தும் அலட்சியமாக நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தவிர சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளும் ரத்தம் செலுத்தும் வி‌ஷயத்தில் சற்று கவன குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. உண்மையில் முதல் தவறு எங்கு நடந்தது என்பதை அறிய தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.



    மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். மாதவி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் மருத்துவ துறையைச் சேர்ந்த மேலும் 5பேர் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஓரிரு நாட்களில் இந்த குழு விசாரணையை முடித்து விடும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு அந்த குழு பரிந்துரை செய்வதற்கு ஏற்ப தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தத்தை செலுத்திய விவகாரம் தொடர்பாக டாக்டர், நர்சு உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் சாத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று பணியில் இருந்த சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 269 (கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்படுத்தல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×