search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி பணிகள்"

    • ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை,ஈசல்தட்டு,பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை ,பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய்,நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு,தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அது மட்டுமின்றி ஆடு,மாடு,கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டது. ஆனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்தனர்.மேலும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளை நிலங்களை தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து. இதமான சீதோசன நிலை நிலவுகிறது. அத்துடன் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களும் புத்துணர்வு பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட காத்திருக்கின்றனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • னியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியவிலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் 2022-23 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் கருவிகள் வழங்குவது, வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.4.25 லட்சம் , விசையால் களை எடுக்கும் கருவிகள் 35 ஆயிரம் , ரோட்டவெட்டரான சூழற்கலப்பைகள் 45 ஆயிரம் ரூபாய், விசைத் தெளிப்பான் கருவிகள் ரூ.3,100 ரூபாய் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதர விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெற்றிடும் வகையில் 5 டிராக்டர்கள் 8 பவர்டில்லர்கள், 1 விசையால் களையெடுக்கும் கருவிகள், 3 ரோட்டவேட்டர், தட்டு வெட்டும் கருவி 4, தென்னை மட்டை துகளாக்கும் கருவி 2, இரண்டு விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றிற்கு 29 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற்றிட அந்தந்த பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தினை அளித்து மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு ) ஆர்.சுப்பிரமணியனின் செல்போன் எண் 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் , 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் , 9865497731 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக்கருவியுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500 வாடகையிலும், மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,230 ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.890 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.450 என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் நில நீர் ஆய்வுக்கருவியின் உதவியால் நிலத்தடி நீர்மட்டத்தை அறிந்து கொள்ளதிருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை விவசாய பெருமக்கள்பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயம்நிலங்களுக்கு ரூ.500 வீதம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்குரூ.1000 கட்டணமாக உழவன் செயலி (UZHAVAN APP) மூலம்அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, திருப்பூர் அலுவலகத்தின் உதவிப்புவியியலாளர் அஞ்சனா மேத்யூவை 7994162692 தொடர்பு கொண்டுபயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • 2,074 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.

    தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையானது 24 அடி கொள்ளளவைக் கொண்டது. இதில்தற்போது 13.54 அடி நீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில் குடிநீா்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் ஜூன் 15 -ந்தேதி முதல் ஜூலை 4 -ந் தேதி வரையில் இரு சுற்று வீதம் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதன்படி 15-ந்தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் 10 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இரண்டாவது சுற்றாக ஜூன் 30-ந் தேதி முதல் ஜூலை 4 -ந் தேதி வரையில் 5 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது. அணையின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலமாக நாள்தோறும் 161.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுவதால் தாராபுரம் வட்டத்தில் 6 ஆயிரத்து 60 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வழியாகதிருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர்,சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய8 ராஜவாய்க்கால்களின் கீழ் பாசன வசதி பெறும் 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த மே 16ல், தண்ணீர் திறக்கப்பட்டது.

    வரும் செப்டம்பர் 28 வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் 2,074 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.வயல்களில், நாற்றங்கால் அமைத்தல், வயல்களில் உழவு பணிகள் என விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×