search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவேரியார் ஆலயம்"

    • நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் சிக்கிய அரசு பஸ்
    • போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    நாகர்கோவில்: 

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தற்போது சவேரியார் ஆலய பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்ததையடுத்து பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்ததால் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து மேயர் மகேஷின் அதிரடி நடவ டிக்கையின் காரணமாக அந்த பணிகள் துரிதப்ப டுத்தப் பட்டது. தற்பொ ழுது பணி கள் முடிந்து அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைக்கு பைப்லைன் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத் தில் ஜல்லிக்கொட்டப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய அளவில் தற்போது பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போக்கு வரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர். இந்த நிலையில் இன்று காலை அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடி யாக அந்த பஸ்சை அப்பு றப்படுத்த அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு எடுத்தனர்.

    இதே போல் நாகர்கோவி லில் இருந்து ராஜாவூருக்கு சென்ற அரசு பஸ்சும் அந்த பள்ளத்தில் சிக்கியது.பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பஸ்கள் அந்த இடத்தில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அந்த பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக உள்ளது.

    அந்த பகுதியில் வேலையை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தது.
    • தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரதான சாலைகளான கோட்டார் சாலையில் தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றதையடுத்து அந்த வழியாக சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

    இதனால் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு, பீச் ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் செட்டிகுளத்திற்கு வந்து சென்று வந்தது.

    கடந்த சில நாட்களாக செட்டிக்குளம்-சவேரியார் ஆலய சாலையில் ஓரளவு வேலைகள் முடிந்ததையடுத்து இரு சக்கர வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தது.

    தற்பொழுது இந்த சாைலயில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் பணிகள் முடிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் இன்று பரிசாத்த முறையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரத்திற்கு சென்ற பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலய சந்திப்பிலிருந்து நேராக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சவேரியார் ஆலய முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டு விட்டது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் சில வேலைகள் முடிக்க வேண்டியது உள்ளது.

    தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது மீண்டும் பஸ்கள் மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×