search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை போராட்டம்"

    சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை ஐயப்பனை தரிசிக்க வந்த இரண்டு பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    கேரளா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.



    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது. இதன்  மூலம், பல பெண்கள் சபரிமலை சென்று பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் , இன்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளதால் திரும்பி  செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.  இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர். #SabarimalaProtest #SabarimalaWomen 
    பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் ஏறிய 2 பெண்களையும் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐயப்பனை தரிசிக்க இளம்பெண்கள் சென்றால் அவர்களை தடுப்போம் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கிடையே சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று அறிவித்தது.

    கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த சித்திரை ஆட்டத் திருநாள், ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறந்த நாள் மற்றும் மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நாட்களில் இச்சம்பவங்கள் நடந்தன.

    இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பெண்கள் நேற்று சபரிமலை சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய அவர்கள் ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    பக்தர்கள் போராட்டத்தால் 11 பெண்களுக்கும் மலையேற முடியாத நிலை ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு அளிக்க முடியாது என கை விரித்ததால் 11 பெண்களும் ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பினர்.



    சபரிமலையில் நேற்று சென்னை பெண்கள் ஏற்படுத்திய பரபரப்பு ஓயும் முன்பு இன்று கேரளாவைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டனர். கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் இன்று அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர்.

    பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.

    அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்தனர். அவர்கள் மலையேற முயன்ற இளம் பெண்கள் இருவரையும் சுவர் போல் நின்று மறித்தனர். நாம ஜெப வழிபாடு நடத்தி பெண்களை திரும்பி செல்லும்படி கோ‌ஷமிட்டனர்.

    காலை 8.30 மணியளவில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். அப்பாச்சி மேட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பெண்களை சன்னிதானம் அழைத்துச் செல்ல முடியாமல் போலீசார் திணறினர். அவர்கள் இதுபற்றி பெண்களிடம் தெரிவித்தனர். இனியும் சன்னிதானம் செல்வது சாத்தியம் இல்லை என்றும், திரும்பிச்செல்வதே நல்லது எனவும் கூறினர்.

    போலீசாரின் சமரசத்தை பெண்கள் இருவரும் ஏற்க மறுத்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி எங்களை 18-ம் படி ஏற்றி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை திரும்பிச் செல்ல மாட்டோம் என்று கூறினர். இதனால் சபரிமலையில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதையடுத்து, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பி அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி 2 பெண்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சபரிமலை செல்லும் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. #SabarimalaProtest #SabarimalaWomen
    சபரிமலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
    புதுடெல்லி:

    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் இப்போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர்.

    ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை போராட்டக் குழுவினர் தடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடைபெறும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
    ×