search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோதமாக மது விற்பனை"

    • 7 பேரை மடக்கிப் பிடித்து 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
    • ரொக்கம் ரூ.210 பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16ந்தேதி அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது மகாலட்சுமி நகர், அவரப்பாளையம், சிங்கனூர், கோடங்கி பாளையம், உள்ளிட்ட இடங்களில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த மணிகண்டன்(39) ரமேஷ்(31) முனியாண்டி (19) விஜய் (26) சரவணன் (36) கார்த்திக் (40) இளையராஜா, (38) ஆகிய 7 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடமிருந்து 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புளியம்பட்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குமார்(40)என்பவரை பிடித்து அவரிடமிருந்து 9 பாட்டில், ரொக்கம் ரூ.700, பறிமுதல் செய்தனர். இதே போல காமநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த விக்னேஷ்(25) என்பவரிடமிருந்து 7 மதுபான பாட்டில்கள் ரொக்கம் ரூ.210 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • மதுபான கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது.
    • டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சில மதுபான கூடங்களில்(பார்) சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் சிலர் மது போதைக்கு அடிமையாகி வருவதாகவும், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பவர்கள், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த 25-ந்தேதி காலை பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்த 2 பேர் பள்ளிக்கு செல்லாமல் பெரம்பலூரில் ஒரு டாஸ்மாக் கடை அருகே உள்ள மதுபான கூடத்தில் இருந்து ஒருவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, அதனை புத்தகங்களை சுமக்கும் பையில் வைத்துக்கொண்டும், நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொண்டும் காட்டு பகுதிக்கு சென்று மது அருந்தியதோடு, புகை பிடித்தனர். பின்னர் போதையில் அவர்கள் நகரில் தள்ளாடியபடி வலம் வந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு மது பாட்டில்கள், போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதோடு, விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

    ×