search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற தொகுதி"

    • 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-

    ஆர்.கே.நகர் தொகுதி

    எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243

    அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.

    வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565

    மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.

    எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.

    எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.

    குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.

    பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.

    வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.

    என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.

    செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.

    ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.

    துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.

    சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.

    விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.

    கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.

    85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
    • பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

    தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
    • 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.
    • வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்ட ரும், மாவட்ட தேர்தல் அலுவலமான ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 6 சட்டமன்ற தொகுதி களுக்கான வாக்குச்சாவடி களின் பகுப்பாய்வு பணியின் போது 229- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சா வடி எண் 4 தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி (ஆதி திராவிடர் நலத்துறை), வாழையத்துவயல், வாக்குச்சாவடி எண், 184, தற்போது பள்ளம்துறை பஞ்சாயத்து சேவை மையம், அன்னை நகர், வாக்குச்சாவடி எண் 190, தற்போது தெங்கம்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, வடக்கு கட்டிடம், மேற்கு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 5 ஆனது பெயர் மாற்றத்துடன் அரசு நடுநிலைப்பள்ளி, கீரிப்பாறையில் செயல்படும்.

    230-நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 78 அரசு நடுநிலைப்பள்ளி களியங்காடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 88.89 ஆகியவை இரட்சண்ய சேனை மேல்நிலைப்பள்ளி வெட்டூர்ணிமடத்திலும், வாக்குச்சாவடி எண். 255 அங்கன்வாடி மையம், கீழமறவன் குடியிருப்பு பகுதியிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண் 18, 19, 20 மற்றும் 21 ஆகியவை பெயர் மாற்றத்துடன் காமராஜர் மண்டபம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் மற்றும் வாக்குச்சாவடி எண். 152 மற்றும் 153 ஆகியவை பெயர் மாற்றத்துடன் பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடம், பால மோர் சாலை பகுதியிலும் செயல்படும்.

    231-குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண், 43, 44 இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. தாணிக்கோட்டவிளை பகுதியிலும், வாக்குச்சாவடி எண்.207 அங்கன்வாடி மையம், இலந்தன்விளை பகுதியிலும் செயல்படும்.

    232-பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 62, 63 கல்வாரி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, கொல்வேல் பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 94, 95, 96 மற்றும் 98 மரியா பாலிடெக்னிக் கல்லூரி, குமரன்குடி பகுதியிலும், வாக்குச்சாவடி எண், 134 அரசு நடுநி லைப்பள்ளி, கண்ணனூர், வாக்குச்சாவடி எண். 185 மற்றும் 186 சி.எஸ்.ஐ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, ஈத்தவிளை பகுதியிலும் வாக்குச்சாவடி எண். 194 சி.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி. அழகியமண்டபம் பகுதியிலும் செயல்படும்.

    233-விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 64 மற்றும் 66 அரசு தொடக் கப்பள்ளி, காங்கோடு பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 65 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி. மொட்டக்காலை பகுதியிலும், வாக்குச்சாவடி எண். 69 மற்றும் 77 அரசு தொடக்கப்பள்ளி, பளுகல் (இருப்பு) மத்தம்பாலையிலும் செயல்படும். மேலும், வாக்குச்சாவடி எண். 34. 35. 36 ஆகியவை அரசு பி.எப்.எம். தொடக்கப்பள்ளி தேவிகோடு (இருப்பு) புன்னாக்கரையிலும், வாக்குச்சாவடி எண்: 59 அரசு தொடக்கப்பள்ளி அண்டுகோடு (இருப்பு) உத்திரங்கோடு பகுதியிலும் செயல்படும்.

    234-கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி எண். 163 மற்றும் 164 ஆகியவை அம்மா மினி மருத்துவமனை, முள்ளங்கினாவிளையில் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில் :

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அவர் தனது நடைபயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த மாதம்(ஜூலை) 28-ந்தேதி தொடங்கினார்.

    இந்நிலையில் அண்ணா மலையில் நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட் டன. அதன்படி மதுரை திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் பகுதியில் நடை பயணம் கடந்த 8-ந்தேதிக்கு பதிலாக 6-ந்தேதியே முடிக்கப்பட்டது. 7 மற்றும் 8-ந்ேததி அண்ணாமலையில் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.

    தனது நடைபயணத்தை தொடர அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    15 -ந்தேதி காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யிலிருந்து தனது நடை பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறையில் சிறப்புரை ஆற்றுகிறார். பின்பு அன்றையதினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, எருதூர் கடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொள்கிறார். மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதி யிலிருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுக்குறியில் சிறப்புரை ஆற்றுகிறார்.

    18-ந் தேதி காலை நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து தனத நடைப யணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். பின்பு டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக் குட்பட்ட கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, பழத்தோட்டம் வழியாக கொட்டாரத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் அண்ணாமலை சிறப்புரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது.

    நடைபயணத்தில் தினமும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துகொள்ள உள்ளனர். அண்ணாமலை வருகை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணா மலை நடைபயணம் மேற்கொண்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்ப டுத்த பா.ஜ.க. நிர்வா கிகள் தயாராகி வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    நாகர்கோவில் :

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி 1-1-2023-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இளம் வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அரவிந்த் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. விழிப்புணர்வு ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், தேர்தல் தாசில்தார் சுசீலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×