search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை பெட்ரோல் பங்கு"

    கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் பங்குகளில் 3 ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற கும்பலை கண்காணிப்பு காமிரா காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் பிரிவில் ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பணியில் இருந்த ஒண்டிப்புதூரை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பங்கில் தூங்கிக் கொண்டு இருந்த ஊழியர்கள் எழுந்து ஓடி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் தேவராஜனை கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.இதைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் கருமத்தம்பட்டியில் உள்ள சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் சென்றனர். அங்கு பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார் மற்றும் தீரன் குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அவர்களிடம் இருந்த பணப் பையை பறித்து சென்றனர். காயமடைந்த தேவராஜ், பங்கஜ்குமார் , தீரன் குமார் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்து ஊழியர்களை குத்தி விட்டு பணப்பையை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கேரள பதிவு எண் கொண்டதாக இருந்தது. எனவே கொள்ளையர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×