search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை குண்டுவெடிப்பு"

    • குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று பா.ஜ.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் கண்டன பொதுக்கூட்டமும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.


    குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காக விசுவ இந்து பரிஷத் சார்பில் திதிகொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அதன் முன்பு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×