search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழித்தீவன தொழில்நுட்ப மையம்"

    திருநெல்வேலியில் கால்நடை, கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையில் எம். எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    பசுந்தீவனம் வீணாவதை தவிர்க்க ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு தானியங்கி புல் வெட்டும் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும். விவசாயிகள் வளர்க்கும் சேலம் மேச்சேரி செம்மறி ஆடுகளின் மரபுத் தரம் உயர்த்தப்படும். மாட்டினம் மற்றும் ஆட்டினங்கள் ரூ.6.29 கோடி செலவில் காப்பீடு செய்யப்படும்.

    கால்நடை நிலையங்களில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்) மற்றும் அசோலா செயல்விளக்க அலகுகள் ஏற்படுத்தப்படும். 500 கால்நடை நிலையங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்மாதிரி கால்நடை கட்டுப்பாட்டுக் கருவிகள் வழங்கப்படும்.

    ஈச்சங்கோட்டை, ஓசூர், உதக மண்டலம் கால்நடைப் பண்ணைகளில் உறைவிந்து உற்பத்தி நிலையங்களில் தரமான உறைவிந்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொலிகாளைகள் மற்றும் காளைக் கன்றுகளுக்கு கால்நடை கொட்டகைகள் ஏற்படுத்தப்படும்.

    கால்நடை நிலையங்களில் உள்ள குளிர் சங்கிலி வசதிகளை மேம்படுத்த 480 தொடர் குளிர் சாதனப் பெட்டிகள், ஒரு குளிர் பதன அறை, ஆயிரத்து 61 குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் ஆயிரத்து 500 தடுப்பூசிப் பெட்டிகள் கால்நடை நிலையங்களுக்கு வழங்கப்படும்.

    திருநெல்வேலியில் கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். சென்னை மாதவரத்தில் ஊரக கோழி உள்ளடு மற்றும் திறன் வளர்ப்பு மையம் அமைக்கப்படும்.

    கால்நடை மற்றும் கோழியின நோய்களைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மையம், சென்னை மாதவரத்தில் ஏற்படுத்தப்படும்

    மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்) அலகுகளை உருவாக்க சென்னை மாதவரத்தில் மையம் அமைக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடியில் இன ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். 
    ×