search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்ைக"

    • கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தில் கண்டமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையும் செலுத்தி வருகின்றனர். செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பல சமயங்களில் ரசீது கொடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வாடகை தொகையை உயர்த்தி நிர்ணயித்திருப்பதாகவும், பலருக்கும் வாடகை நிலுவைத் தொகை குறைந்தபட்சம் ரூ5 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாகரூ 12 ஆயிரம் வரை இருப்பதாகவும் உடனடியாக கட்டவேண்டும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    கோவில் நிர்வாகத்தால் தற்போது சொல்லப்படும் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வீடுகளுக்கான வாடகைத்தொகையை தற்போது குடியிருப்பவரிடம் கலந்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

    50 ஆண்டுகளுக்குமேலாக குடியிருக்கும் தங்களுக்கு இதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து நியாயமான பதில் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும்.
    • தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். தேர்தல் வாக்குறுதியின்படி ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து ரூபாய் 381 ஆக உயர்த்தி முழுமையாக வழங்கிட வேண்டும்.

    காலை 7 மணிக்கு வேலை தளத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவது கைவிட வேண்டும்ஊரக வேலை அட்டைபெற்றுள்ள அனைத்து குடும்பங்க ளுக்கும் முழுமையான வேலை நாட்கள் வேலை அளிக்க வேண்டும்.

    ஊரக வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வேலை வாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் துவங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கலியபெருமாள் தலை மையில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் (அஇவிதொச) பாலையா, சிபிஐ (எம்) ஒன்றிய செயலாளர் ராதா, சுப்ரமணியன், முரளி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ×