search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்"

    கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.
    சென்னை:

    கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.

    துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வைதேகி விஜயகுமார் பேராசிரியர் பணியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.

    6 ஆண்டுகளுக்கும் மேலாக துணை தலைவராகவும், 5 ஆண்டுகள் டீனாகவும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து நிர்வாக ஆற்றல் பெற்றவர்.

    கனடா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.

    ஆராய்ச்சித்துறையில் 24 ஆராய்ச்சியாளர்களுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார். சர்வதேச அளவில் 266 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
    ×