search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைக்கடிகாரம்"

    • மியூனிச் சுங்க துறை அர்னால்டிற்கு அபராதம் விதித்தது
    • ஆஸ்திரியாவின் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட்டில் ஏலம் நடைபெற்றது

    இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger). கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்தவர் அர்னால்ட்.

    ஆஸ்திரியாவில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

    பயணத்தின் போது, தென் கிழக்கு ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகர விமான நிலையத்தில் அவரது உடைமைகளில், உடைமை பட்டியலில் குறிப்பிடாத விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம், சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

    ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர்.

    அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து, ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் (Stanglwirt Resort) எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் ஏலம் நடைபெற்றது.

    அர்னால்டின் கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போனது.

    அங்கு நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய அர்னால்ட், "உலகளவில் மாசுபாடு குறித்து நடைபெறும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். நாம் இந்த விஷயத்தில் நீண்ட தூரம் வந்து விட்டோம். தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காண பலர் முன் வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாசுபாட்டிற்கு எதிரான் என் போராட்டத்தில் இணைந்த அனைவருக்கும் என் நன்றி" என தெரிவித்தார்.

    இந்த ஏல நிகழ்ச்சியில் மொத்தம் 1.31 மில்லியன் யூரோ வசூலானது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனியில் ஹிட்லர் பாடி டபுள்களை பயன்படுத்தினார்
    • ராணுவ உளவுத்துறை செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிபடுத்தினார்

    திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஒருவரை போன்றே அச்சு அசலாக தோற்றமளிக்கும் பாடி டபுள் எனும் மற்றொரு நபரை பல்வேறு காரணங்களுக்காக சில காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம்.

    அவ்வாறு தோற்றமளிக்கும் பாடி டபுள் நபர்களை, பொது வெளியில் தனக்கு பதிலாக நடமாட விடும் வழிமுறையை இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனியில், ஹிட்லர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக இன்றும் நம்பப்படுகிறது.

    ரஷிய அதிபர் புதின், எதிரிகளால் பொதுவெளியில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தன்னை போலவே தோற்றமளிக்கும் பாடி டபுள்களை பொதுவெளியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

    நடை, உடை, பாவனை, பேசும் விதம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு புதினை போலவே நடந்து கொள்ள பயிற்சியளிக்கப்பட்டு இருப்பதாக அத்த தகவல்கள் கூறின.

    புதின் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து, தனக்கு பதிலாக தனது பாடி டபுள் ஒருவரை பயன்படுத்துகிறார் என கடந்த ஜூன் மாதம், உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூஸோவ் என்பவரும் உறுதிபட தெரிவித்திருந்தார்.

    ரஷிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் ரஷிய நாட்டின் தேசிய திட்டங்களுக்கான மையத்தின் ஒரு சந்திப்பில் புதின் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக புதின் எதேச்சையாக தனது இடக்கரத்தை பார்க்கிறார். அக்கரத்தில் கடிகாரம் இல்லாததால் உடனடியாக தனது வலக்கரத்தை பார்த்து நேரத்தை தெரிந்து கொள்கிறார்.

    இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது புதின் அல்ல என்றும் அவரை போன்று தோற்றமளிக்கும் ஒரு பாடி டபுள் என்றும் இது சம்பந்தமாக இத்தனை காலம் வெளியான செய்திகள் உண்மை எனவும் இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள்.

    இடது கர பழக்கம் உள்ள புதின் தனது வலக்கரத்தில் கைக்கடிகாரம் அணிவது வழக்கம். எனவே நேரத்தை தெரிந்து கொள்ள இடக்கர பழக்கம் உள்ளவர்கள் வலக்கரத்தைதான் பார்க்க வேண்டும் எனும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

    பல நாட்களோ, வாரங்களோ பொதுவெளியில் இருந்து அதிபர் புதின் காணாமல் போய், பிறகு திடீரென தோன்றுவதும் ரஷியாவில் சகஜமான ஒன்று என்பதால் இந்த விமர்சனங்களில் உண்மை இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர்.
    • செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-புதுவை சாலையில் காந்தி சிலை அருகில் உள்ள திரு.வி.க. சாலையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பபள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ, நிவேதா ஆகிய 2 மாணவிகள் பிளஸ்-2 படித்தனர். அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் எச்சரிக்கை கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடிகாரம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கடிகாரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜி.பி.எஸ்.) மற்றும் சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தை கையில் அணிந்திருந்த போது யாராவது தங்களை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாலோ அல்லது நகைகளை பறிக்க வந்தாலோ இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    மேலும் அலாரம் அடிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். இந்த அலார சத்தத்தினால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காப்பாற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். அதன்படி நாங்களும் அறிவுப்பூர்வமாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர். செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கிராம மக்களிடம் போதிய செல்போன் வசதி இல்லாததால் நாங்கள் புதிதாக இந்த கருவியை கண்டு பிடித்துள்ளோம்.

    எங்களுடைய இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, அறிவியல் ஆசிரியை ஜோசப்பின் ஆகியோர் ஊக்கமளித்தார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும்படி அறிவித்து உள்ளார். அதன்படி எங்கள் பள்ளி மாணவிகள் அறிவுபூர்வமாக கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் 26 ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 10 புதிய கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த கைக்கடிகாரமும் இடம் பிடித்துள்ளது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலெக்டர் இந்த கேடயத்தை வழங்கினார்.

    இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு 11 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
    • பார்வதிபுரம் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியிலும் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் பெண்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

    நாகர்கோவில்

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியம் பொ துத்தேர்வு 2022-க்கான 2-ம் நிலை காவலர் ஆண் மற்றும் பெண் ஆயுதப்படை மற்றும் சிறப்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான நேரடி தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு 11 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு காலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அவர்களது அனுமதி சீட்டை பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியிலும் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மையத்தில் பெண்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே தேர்வு மையத்திற்கு பெண்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் கணவர்களுடன் வந்திருந்தனர்.

    ஒரு சில பெண்கள் கைக் குழந்தைகளையும் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்லும்போது கைக்குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். தேர்வு மையத்திற்குள் சென்ற பெண்கள் கைக்கடிகாரம் அணிந்து சென்றனர். பரிசோதனையில் ஈடுபட்ட போலீசார் அதை கழற்றுமாறு கூறினர். இதையடுத்து கைக்கடி காரத்தை கழற்றி உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் அதற்கென ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து சென்றனர்.

    தேர்வு எழுத வந்த பெண்களை அழைத்து வந்தவர்கள் மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார்.

    ஆரல்வாய்மொழி ஜெய மாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம். ஐ. கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியல் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    காலையில் 10 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம் 12.40 மணிக்கு முடிவ டைந்தது. தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×