search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் இருந்து"

    • கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் உறுதியாகி உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்குதல் இல்லை. பறவை காய்ச்சல் நோய், பறவை இனங்களை தாக்கும் வைரஸ் தொற்று நோய்.

    இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப்பற வைகளை தாக்கும். இந்நோய் கிருமி பல வகையாக இருந்தாலும் 'எச்5என்1' என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது.

    இந்நோய் பாதிப்பு பண்ணையில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலம் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. நோய் வராமல் தடுக்க உயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், புறக்கடை கோழிகளை நேரில் கண்காணித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் கால்நடை துறை உள்ளது.

    கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சு, முட்டை, கோழித்தீவனம், பிற தீவனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களை வாங்க கூடாது. கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு முட்டை, தீவன பொருட்கள் வாங்கினால் அவற்றை அழிக்கலாம்.

    பண்ணைக்குள் செல்வோர் கால்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து செல்லலாம். பண்ணைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும்.

    பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும்.

    பண்ணைகளில் அசாதாரண இறப்பு இருந்தால் கால்நடை துறைக்கு தெரிவிக்க வேண்டும். பண்ணையா ளர்கள் வேறு பண்ணைகள், பறவைகள் சரணாலயம் செல்வதையும், பண்ணை க்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    பிற மாநிலத்துக்கு முட்டைகளை எடுத்து செல்ல, காகித அட்டை பெட்டிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த பெட்டிகளை திரும்ப எடுத்து வரக்கூடாது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள புஞ்சைதுறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரிடம் வாணிப்புத்தூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பரிசு விழும் என ஆசை வார்த்தை கூறி ரூ.100 வாங்கி கொண்டு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 2 கொடுத்துள்ளார்.

    விசாரித்ததில் இரண்டு லாட்டரி சீட்டுக்களும் போலி என தெரியவந்தது, இதனையடுத்து தன்னை ஏமாற்றிய குமார் மீது பங்களாப்புதூர் போலீசாரிடம் கார்த்திக் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள பெட்டி கடை அருகே இருசக்கர வாகனத்தில் போலி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.

    குமாரிடம் இருந்து ரூ.2,800 மதிப்புள்ள 56 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், செல்போன், லாட்டரி விற்ற பணம் ரூ.300 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிடிபட்ட குமாரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து ரஞ்சித் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை குமார் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார்.

    ×