search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள முதல் மந்திரி"

    கேரளாவில் பலத்த மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். அனைத்து உதவிகளும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாக கேரள முதல்-மந்திரியுடன் நாராயணசாமி டெலிபோனில் பேசியுள்ளார். #keralaheavyrain #narayanasamy

    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த மழையினால் ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுடன் டெலிபோனில் பேசினார்.

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் புதுவையும் பங்கேற்பதாகவும், மேலும் வெள்ள சேதங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். #keralaheavyrain #narayanasamy

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.

    அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.

    பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.

    பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோயுக்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.

    பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அப்போது அது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று அறிவிக்கப்பட்டது.

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கியூமன் வைராலஜி என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். #KeralaCM #PinarayiVijayan
    ×