search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமாரக்கள்"

    • ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.
    • ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வலபாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பே ட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

    இந்து முன்னணி சார்பில் நடக்கும் 30-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொள்கிறனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    முன்னதாக பிற்பகல் தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இன்று மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வல பாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுரங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    அசம்பா விதம் ஏதும் ஏற்ப்பட்டால் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி.சந்தோஷ் குமார், திருச்சி டி.ஐஜி சரவணக்குமார், தஞ்சை டி.ஐ.ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார், ரவளிபிரியா, சுந்தரவதனம், சீனிவாசன், ஜவகர், துரை, ஜெயசந்திரன், புரோஸ் அப்துல்லா, வஞ்சிதா பாண்டி, நிஷா, 10 ஏ.டி.எஸ்பி, 37 டி.எஸ்பி.கள், 38 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பாதுக்காப்பு பணிகளை திருச்சி மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

    இந்தநிலையில் முத்துப்பே ட்டை சுற்று பகுதியில் உள்ள 14 டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் முத்துப்பேட்டை நகர் பகுதி மற்றும் அருகே உள்ள பகுதியில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×