search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைமயில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஜூன்.30-

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனாவால் 79 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கடந்த சில மாதங்களாக பாதிப்பு குறைந்திருந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு வேகமாக பரவியதால் குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    இருப்பினும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியிலும் கொேரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொேரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சிறையில் அவருடன் இருந்த வேறு கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் நாகர்கோ விலைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 டாக்டர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 1,040 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதி யில் 12 பேரும், அகஸ்தீ ஸ்வரம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் தலா 4 பேரும், கிள்ளியூர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலா 3 பேரும், மேற்புறம், தோவாளை ஒன்றியத்தில் ஒருவரும், முஞ்சி றையில் 9 பேரும், திருவட்டாரில் 6 பேரும், தக்கலையில் 8 பேரும் பாதி ப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் ஆவார் கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளது. சுகாதாரத்துறை அதிகா ரிகள் தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைம யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    ×