search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி"

    • ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்
    • சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்தனர்

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 34). இவரது உறவினர் சுமதி (32). இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • மதுரை கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது செய்தனர்.
    • சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பாலரெங்கா புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவகார்த்திகேயன் (வயது 19). இவர் முத்துப்பட்டி, பெருமாள் நகரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.

    அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை, பீர்பாட்டிலால் தாக்கியது. இது குறித்து சிவகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தர விட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பல் மேலும் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பியது தெரிய வந்தது.

    முத்துப்பட்டி, விருமாண்டி தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார். அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அவர்கள், 'காசி எங்கே?' என்று கேட்டனர். இதற்கு செல்வம், எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த கும்பல், செல்வத்தை கத்தி யால் குத்தியது. மேலும் அந்த கும்பல் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி யது.

    தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முத்துப்பட்டி, வீரமுடையான் தெரு சடேஸ்வரன் மகன் நிதிஷ் (20), பார்த்தசாரதி மகன் மணிகண்டன் (23), பசுமலை, அம்பேத்கர் நகர் குமரேசன் மகன் சரத்குமார் (22), அந்தோணி மகன் சக்திவேல் (22), முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெரு ரஞ்சித்குமார் (25) ஆகியோர் கத்திக்குத்து சம்பவத்தில் தெரிய வந்தது. அவர்களை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×