search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூரை"

    • குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது.
    • 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தற்காலிகமாக 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவிழா முடிந்து கடைக்காரர்கள் ஒவ்வொருவராக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இன்று காலை பணிகள் நடைபெற்றது.

    அப்போது திடீரென 300 அடி நீளமுள்ள மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. முதியவர் உட்பட 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் திருவிழா முடிவடைந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், பந்தல் ஒப்பந்ததாரர் முறையாக பந்தலை அமைக்கவில்லை என வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் குடிசை வீடு, வீட்டிற்குள் உள்ள மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி வெளியேறி கூரையில் பட்டு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.

    குடிசை வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தற்காஸ் கிராமத்துக்கு நேரில் வந்து தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், வி.ஏ.ஓ. பவளச்சந்திரன்,வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டி யன், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    ×