search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுக்குடிநீர்"

    • கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    மதுரை

    மதுரையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையின் முக்கிய சாலை பகுதியாக இருக்கும் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்தப் பணியால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. அதனை போக்கும் விதமாக மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், ஆகியோர் மதுரையில் நடைபெறும் இந்த பைப் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வேலை ஆட்கள் சுழற்சி முறையில் இரவு நேரங்களிலும் பணி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலையில் பல்வேறு பகுதிகளில் மேயரும் மாநகராட்சி ஆணை யாளரும் நகர் நல பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி அளவில் மாநகராட்சி ஆணையாளர் டி.வி.எஸ். நகர் மற்றும் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வராததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் இதன் காரணமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சிக்கு 29 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

    தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 60 லட்சம் குடிநீர் கொடுப்பதற்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவே கூட்டுக் குடிநீர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் சரிவர வராததால் நகரில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதி காரிகள் உடனடியாக தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×