என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூடுதல் நிதி"
- குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
- ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
- சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடலூர்:
தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இக்குழுவினர் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பனுடன் சென்று கடலூர் துறைமு கத்தில் நடைபெறும், தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கை மற்றும் தற்போது நடைபெற்ற சட்டமன்றத்தில் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இக்குழு துறைமுகத்தை ஆய்வு செய்து உள்ளனர். துறைமுகத்தில் நடைபெற்ற பணியில் மோசடி செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், துறைமுக வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என பேசினார்.
இதனை தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்க சார்பில் ஆய்வுக்குழுவிடனம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் துறைமுகம் 135 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆனால் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஆழப்படுத்தியும், மற்றொரு பகுதியில் ஆழப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் கடலில் பிடிக்க ப்பட்ட மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறுகையில், கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்கு முக்கிய காரணம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய அய்யப்பன் எம்.எல்.ஏ.தான். கடலூர் துறைமுகத்தில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கடலூர் கலெக்டர் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவை அமைத்து உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
- கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.
தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.
தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்