search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர் அருகே"

    • காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.

    ஊட்டி

    கூடலூர் அடுத்த பாடந்துறை அருகே உள்ளது சுண்டவயல் கிராமம். இந்த பகுதியையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இங்கு காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதுடன், வீடுகளை இடித்து தள்ளி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.

    அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள சுப்பிரமணி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானையின் நடமா ட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
    • காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் பாடந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணி (56). இவா் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றாா்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானாா். தகவலின்பேரில் புளியம்பாறை பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இதேபோல கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் கடந்த நவம்பா் 19 ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து தேவாலா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதனைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை தாக்கிய பிஎம் 2 அரிசி ராஜா என்கிற காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்நிலையில் கூடலூா் பாடந்துறை கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கல்யாணியைத் தாக்கி கொன்றது ஏற்கெனவே தேடப்பட்டு வரும் பி.எம் 2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

    ×