search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவாட் அமைப்பு"

    • குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு விரைவில் நடைபெறுகிறது.
    • குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி எவ்வித திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    ஆஸ்திரேலிய பிரமதர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் குவாட் உச்சிமாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த உச்சுமாநாடு அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

     

    குவாட் அமைப்பு துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. இந்த அமைப்பு அதன் இளம் காலத்திலேயே உள்ளது. இதனிடையே புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை, என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரின் ஜீன் பெர்ரி தெரிவித்துள்ளார். இதற்கு குவாட் உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "சிட்னி மாநாட்டில் இந்தோ பசிபிக் பகுதியில் குவாட் உறுப்பினர்கள் காலநிலை, சர்வேதச ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கூட்டணி அமைத்தல் தொடர்பான வாய்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். குவாட் அமைப்பின் முக்கிய குறிக்கோள் இந்தோ பசிபிக் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்த சமயத்தில் நீட்டிப்பு அல்லது அமைப்பை விரிவுப்படுத்துவது பற்றிய பேச்சுகளுக்கு இடமில்லை," என்று அவர் தெரிவித்தார்

    • குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதி

    இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். உக்ரைன் மோதல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமையை குறிப்பிட்டுள்ளனர்.

    அதில் இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தொடர்பான கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, குவாட் அமைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது, அமைதி மற்றும் வளர்ச்சியின் போக்கிற்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

    ×