search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு உறுப்பினர்கள்"

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

     திருப்பூர்:

    இந்து சமய அறநிலையத்து றை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 62நபர்களுக்கு உறுப்பினர்களுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தினையும், ஒருகாலப்பூ ஜை திட்டத்தின் கீழ் திருக்கோவி ல்களில்பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் பணியாளர்க ளின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் புனரமைக்கும் திட்டத்தினையும் என எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கிராமப்புறத்திருக்கோயில் திருப்பணி நிதியுதவித்தி ட்டத்தின் கீழ் திருக்கோயி ல்களின் திருப்பணிக்கு வருட ந்தோறும் அரசு நிதியுதவியாக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 20 திருக்கோ யில்களுக்கு ரூ.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 60 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2லட்சம் வீதம் மொத்தம் 60 திருக்கோயி ல்களுக்கு ரூ.120 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகள் வழங்கப்ப டவுள்ளது. இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்க ளாக முதல்கட்டமாக நியமிக்க ப்பட்ட 62 நபர்களுக்கு உறுப்பி னர்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (இந்து சமய அறநி லையத்துறை)செந்தில்குமார், முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன்சாமி, திருப்பூ ர்மாநகராட்சி 4-ம் மண்டல த்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட அறங்காவலல் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்காடு ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தவள்ளி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

    கூட்டத்தில் ஊராட்சி நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு. பின்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்ட்து. ஏற்காட்டில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.

    பழுதடைந்த பள்ளிகள் புதுப்பிக்க ஆவன செய்யப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் சார்பில் நிலம் தர கோரிக்கை விடுத்தனர்.

    தீயணைப்பு நிலையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பதாகவும் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 2 ஏக்கர் நிலம் தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் ஏற்காடு ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணிமுரளி, வருதாயிரவி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×