என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குளம் தூர்வாரும் பணி"
- தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி பகுதியில் உள்ள பாதாளீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வாரவும், குளக்கரை மீது நடைபாதை அமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் ஒருங்கிணைந்த பன்னாட்டு அரிமா சங்கம், மோபீஸ் இந்தியா மற்றும் எக்ஸ்னோரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து குளத்தை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையில் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சுப்பிரமணி, சீனிவாசன், பாண்டியலட்சுமி, கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு குளம் தூர் வாரும் பணிக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இப்பணியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில்ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி கேயன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்