search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல் துறைமுகம்"

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
    • சுமார் 300 கிலோ கொண்ட திருக்கை மீன்கள் 1 கிலோ ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.நேற்று பைபர் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட சூரை மீன்கள் வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு போனது. விசைப்படகில் பிடித்துவரப்பட்ட புல்லன் மீன்கள் 1 கிலோ ரூ.150 வரை விலை போனது. இன்று புல்லன் மீன்கள் விலை குறைந்தது ரூ.100-ம், சூரை மீன்கள் 1 கிலோ ரூ.100-ம் விலை போனது.

    இதற்கிடையே இன்று காலை கரை திரும்பிய ஒரு விசைப்படகில் கொம்பன் திருக்கை மீன்கள் திருக்கை மீன்களுக்கு மருத்துவக்குணம் உள்ளதால் மருந்து நிறுவன வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்துச் சென்றனர். சுமார் 300 கிலோ கொண்ட திருக்கை மீன்கள் 1 கிலோ ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

    கட்டுமரங்களில் பிடித்து வரப்பட்ட நெத்திலி மீன்களின் விலை முதலில் ரூ.1700 வரை விலை போனது. பின்னர் இதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

    • பலத்த காற்று எதிரொலி
    • குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும், 8-ந் தேதி குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்ப ட்டு உள்ளன.

    இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மற்றும் கிளி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.

    காற்று எச்சரிக்கை காரண மாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.இதனால் குளச்சலில் இன்று மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    • சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்க உத்தரவு
    • துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தமிழக மீன் வளத்துறை ஆணையர் பழனிச்சாமி குளச்சல் மீன்பிடித்துறைமுகம் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    துறைமுகத்தில் அமைக் கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டை பார்வையிட்ட அவர் இம்மாதம் இறுதியில் திறக்க ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், இணை செயலாளர் ஆன்றனிதாஸ், பொருளாளர் அந்திரியாஸ் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார்.

    இதில் நாகர்கோவில் மீன்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், குளச்சல் மீன்துறை துணை இயக்குனர் விர்ஜில் கிராஸ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது குளச்சல் மீன்பிடித்துறைமுக செயலாக்கம் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் துறைமுகத்தில் சுத்தமாக குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் தேங்காய்பட்டணம் துறைமுகம் சென்றார்.

    ×