search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம் போலீஸ் நிலையம்"

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் கல்லூரி மாணவி தஞ்சம் அடைந்தார்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபின் பிராங்க் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரும், பொன்மனை பெருவள்ளிக்கடவு பகுதியைச் சேர்ந்த அனிஷா (19) என்பவரும் காதலித்து வந்தனர். அனிஷா கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது சுபின் பிராங்குடன் அனிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்தனர். 

    இந்த விவகாரம் அனிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்ற அனிஷா, தனது காதலன் சுபின் பிராங்குடன் மாயமானார். 

    இதுகுறித்து அனிஷாவின் பெற்றோர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் அனிஷா மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிஷாவை தேடி வந்தனர். 

    போலீசார் தேடுவதை அறிந்து அனிஷாவும், அவரது காதலன் சுபின் பிராங்கும் நேற்று இரவு குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து சமரசப்பேச்சு நடத்தினர். அப்போது சுபின் பிராங்கை, அனிஷாவின் உறவினர்கள் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து போலீசார் சுபின் பிராங்கை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனிஷாவிடம் அவரது தாயார் பேசினார். தங்களுடன் வந்து விடும்படி கூறி அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அனிஷா தாயின் கண்ணீரை பெரிதுபடுத்தவில்லை. காதலனுடன் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனிஷாவை காதலன் சுபின் பிராங்குடன் அனுப்பி வைத்தனர்.
    ×