என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கும்பகோணம் அரசு மருத்துவமனை"
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா (வயது 23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது டாக்டர்கள் கையில் இருந்த ஊசியை அகற்றி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து வலி குறையாததால் அது ஆபரேசன் செய்ததால் ஏற்பட்ட வலி என்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள சசிகலாவுக்கு நெஞ்சு பகுதியில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் நடத்தும் ஒரு டாக்டரிடம் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது முறிந்து போன ஊசி கையில் இருந்து நகர்ந்து நெஞ்சு பகுதிக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் ஊசியை அகற்றவில்லை. கையில் இருந்த ஊசி தற்போது நெஞ்சு பகுதிக்கு வந்துவிட்டது. தஞ்சை மருத்துவமனையில் ஆபரேசன் செய்ததாக கூறி என்னை ஏமாற்றிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. வழக்கம் போல மருத்துவமனை இன்று காலை பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஸ்கேனிங் அறையின் அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு சந்தேகம் அடைந்த பரிசோதனை அறையில் உள்ள செவிலியர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றி கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் செவிலியர்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்ததால் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதைதொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். அவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 6 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? அல்லது குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்