search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துவிளக்கு பூஜை"

    • இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.
    • இங்கு அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து,

    லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.

    அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.

    அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்.

    சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும்.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும்.

    108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

    ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

    நவசக்திகள் பராசக்தியின் ஒன்பது சக்தி அம்சங்களாகும்.

    அவை சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என்பவைகளாகும்.

    இதனை தீப்தை, சூட்சுமை, வாமை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வியுக்தை, சர்வதோ முக்தை என்றும் அழைப்பார்கள்.

    புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில்

    முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும்,

    விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.

    ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும்.

    இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.

    புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

    ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.

    சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில்

    ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.

    இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

    ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

    எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாகும்.

    வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம்.

    அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.

    திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

    ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்.

    துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.

    குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

    • குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார்.
    • வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்கவும், தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றைப் பெறவும், விரதம் இருந்து குத்துவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர்.

    குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார். நாகராஜ குருக்கள் குத்துவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்தார். வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குத்து விளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியினர், மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இடும்பன் பூஜையும், அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியான நேற்று மறு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு ஏராளமான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது.
    • இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் புது மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. அங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாத பவுர்ணமியையொட்டி கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் அங்கு நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் ஆசி வழங்கினார். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×