search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடோன் தீ விபத்து"

    • தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.
    • 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகை பெட்டி தயாரிக்கும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீ வேகமாக பரவ தொடங்கியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குடோன் முழுவதும் பரவிய தீ, அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    குடோனில், சமையல் எரிவாயு சிலிண்டரும் பயன்பாட்டில் இருந்துள்ளது. 130 தொழிலாளர்கள் இருந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    • குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    செங்குன்றம்:

    சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது57). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே விருதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.

    இதற்கிடையே விரைந்து வந்த அவர்கள் குடோன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குடோனில் 75 சதவீத பகுதி முழுவதும் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருந்தது.

    அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் பழைய பஸ் நிலையப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது.
    • தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பானி பூரி உள்ளிட்ட வடமாநில உணவு வகைகள் தள்ளுவண்டிகளிலும், குடை அமைத்தும், கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பு சாப்பிடுகிறார்கள்.

    இதில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து அங்கேயே உணவு வகைகளை தயாரித்து காலை, மாலை நேரங்களில் பானிபூரி விற்பனை செய்கின்றனர்.

    அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு மாசி வீதி ராமாயணம் சாவடி அருகே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சிங் என்ப வர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு எடுத்து தங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பானி பூரி விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்குள்ள முதல் மாடியில் 3 பேட்டரிகளை சார்ஜ் ஏற்றுவதற்காக மின்சாரத்துடன் இணைத்து வைத்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு பேட்டரி வெடித்துச் சிதறியது. இதனால் முதல் மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது.

    இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெரியார் நிலைய தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேல் மாடியில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து சேதமடைந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்த டுத்து தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து, தற்போது பானி பூரி தயாரிக்கும் வடமாநிலத்தவர் தங்கியிருந்த வீட்டில் பேட்டரி வெடித்து தீ விபத்து என நீண்டு கொண்டே செல்வது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியிலும், அப்பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் இடையேயும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவலாபுரம் துத்திப்பட்டு கூட்ரோடு அருகே இயேசு ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் மற்றும் தோல் பொருள்கள் வைக்கும் குடோன் உள்ளது.
    • ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் துத்திப்பட்டு கூட்ரோடு அருகே இயேசு ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் மற்றும் தோல் பொருள்கள் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் ஒரு மணி நேரம் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தீ விபத்தில் கார், லோடு ஆட்டோ எரிந்து நாசமானது. இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 46). இவருக்கு சொந்தமான சாக்கு குடோன் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய சாக்குகள், நோட்டு, டைரி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது குடோனில் இருந்து நள்ளிரவு 12 மணி அளவில் 'குபுகுபு'வென கரும்புகை வந்தது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அனுப்பானடி, பெரியார் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான சாக்கு, நோட்டு, டைரி ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன.

    இதுபற்றி குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் மின்சார மோட்டார் சைக்கிள் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார்.

    இரவில் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிந்தது.இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மளமளவென பரவிய தீயானது சர்வீஸ் நிலையம் முழுவதும் பரவி உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டார் சைக்கிள்களும், உதிரி பாகங்களும், பேட்டரிகளும், தீயில் எரிந்து நாசமானது.

    எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

    சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×