search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்துடன்"

    • 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதனால் கொடிவேரி அணை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்ப ணையிலும் தொடர்ந்து மக்கள் குடும்பத்துடன் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வந்திருந்தனர்.

    காலை நேரத்தில் பொது மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கொடிவேரிக்கு குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் வெயிலின் தாக்கத்தால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பலர் நீண்ட நேரம் கொட்டும் தண்ணீரில் குளித்த மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது. பொதுமக்கள் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.62 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கந்து வட்டி கொடுமையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
    • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த மண்எண்ணையை எடுக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ராயப்பன் (வயது 47) என்பதும் அவரது மனைவி வேளாங்கண்ணி (37), இவர்களது மகள் ஆரோக்கிய ஷாலினி (வயது 22) என்பதும், ஆரோக்கிய ஷாலினியின் கல்லூரி படிப்புக்காக ராயப்பன், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிரவனிடம் கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

    பின்னர் கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த சென்ற போது, கதிரவன் தனக்கு வட்டியுடன் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையெனில் பூர்வீக சொத்தை தனது பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மண்எண்ணை கேனுடன் வந்ததாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்எண்ணை கேனுடன் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×