என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடியிருப்பு கட்ட எதிர்ப்பு"
பெரிய பாளையம்:
வெங்கல் அருகே உள்ளது பூச்சி அத்திப்பேடு கிராமம். இந்த ஊராட்சியில் சுமார் மூவாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் ஆயிரத்து 152 வீடுகள் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் சென்னைக்குச் செல்லும் குடிநீர் மாசுபடும் என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
மேலும் கட்டிடம் கட்டும் இடத்தை தங்கள் பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கடந்த மாதம் 11-ம் தேதி கிராம மக்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய ஊத்துக்கோட்டை தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இருப்பினும்,கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்ன வெங்கடாஜலபதி தலைமையில் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள்,வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்