search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சிக்கல்"

    ஆத்தூர் காமராஜர் அணை முழுமையாக வறண்டதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காமராஜர் அணை. இந்த அணைமூலம் ஆத்தூர், சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் திண்டுக்கல் மாநகராட்சிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே மழை ஏமாற்றி வருவதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால் திண்டுக்கல் நகர் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால் பெரும்பாலும் காமராஜர் அணை நீரையே திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தபோதும் கீழ்மலை பகுதியில் மழை இல்லாததால் காமராஜர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இருக்கும் தண்ணீரும் குறைந்தது.

    தற்போது அணையின் நீர்மட்டம் பூஜ்ஜியம் அளவில் உள்ளது. இதனால் திண்டுக்கல் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக 11 எம்.எல்.டி வரை நீரை பெற முடியும். ஆனால் திண்டுக்கல் நகருக்கு அதுபோதாது. தற்போதே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடை மழை கீழ்மலை பகுதியில் பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×