என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குஜராத்தில் ஆஸ்பத்திரி"
- திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.
- 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பரிமல் கார்டன் பகுதியில் ஒரு 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 4-வது தளத்தில் ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 20 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.
இந்நிலையில் அங்கிருந்து 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள எலும்புமூட்டு சிகிச்சைப் பிரிவில் தீப்பற்றியதாகவும், அது முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்