search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்டி நிறுவனம்"

    நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை ஒப்பந்த அடிப்படையிலும், ரேசன் கடைகளுக்கு பருப்பும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகம் செய்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு மற்றும் முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தது. போலி நிறுவனங்கள் தொடங்கி பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் உள்பட 72 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாராசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர், ஆகியோர் வீடுகளிலும் 7 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அப்போதைய தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீட்டில் நடந்த சோதனையில் அவர் பதவிக்கு வந்த பிறகு பல மடங்கு சொத்து அதிகரித்தற்கான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரித்த போது அவர் மாடியில் இருந்து குதித்த தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த தகவல் படி திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமி மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.


    மேலும் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்களில் சத்துணவு திட்டம், சத்து மாவு வினியோகம், முட்டை டெண்டர் விவகாரத்தில் பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பட்டியல் இடம் பெற்றிருந்ததாக அப்போது கூறப்பட்டது.

    இந்தநிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ்களை தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது சத்துணவு திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2400 கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தது தொடர்பான பட்டியல் அதில் இருந்தது.

    வங்கிகளின் மூலமாகவும், ஆன்லைன் மூலமும் சிலருக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களும் இதில் சிக்கியுள்ளது. குறிப்பாக முக்கிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் டிரைவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் பெயரில் இந்த லஞ்சப்பணம் கைமாறி உள்ளதையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

    அரசியல் சத்துணவு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவியும் உள்ளது. இதனால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடநத்திருப்பதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

    தற்போது லஞ்சப் பட்டியலில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் வருமான வரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் தமிழக அரசிடமும் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி பணத்தை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான பட்டியல் சிக்கியதால் அந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது சத்துணவு திட்டத்திலும் முறைகேடு மற்றும் லஞ்சப்பட்டியல் சிக்கியுள்ளதால் இந்த வழக்கும் விரைவில் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதனால் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர். #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    கிறிஸ்டி நிறுவனத்தில் இன்று 3வது நாளாக ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
    திருச்செங்கோடு:

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான முட்டைகளை அனுப்பும் பணி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு வினியோகம் செய்யும் பணியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவன அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை 5 நாட்களாக நடைபெற்றது. அப்போது பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஆய்வு செய்தனர்.

    நேற்று 3-வது நாளாக இந்த நிறுவனத்தில் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு, ஏற்கனவே இந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்டு அறையில் பூட்டி சீல் வைத்திருந்த ஆவணங்களை மறு ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து ஆய்வு நடந்தது.


    கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு மற்றும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.

    போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 5-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், ஆடிட்டர், கணக்காளர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் இருந்த கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை பெங்களூரு, திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்திய போது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

    5 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், 100-க்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நிறுவனத்தின் சொத்து மதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது போலியாக நிறுவனங்களை தொடங்கி முறைகேடு செய்ததும், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் பல கோடி முதலீடு செய்ததும் தெரிய வந்தது.

    கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் படி கிறிஸ்டி மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


    சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டை வழங்க ஆண்டுக்கு 480 கோடி ரூபாய்க்கு சமூக நலத்துறை சார்பில் நேற்று டெண்டர் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த நேச்சுரல் புட், கிறிஸ்டி கிஷான், ஸ்வர்ண பூமி என்ற நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி வழங்கி இருந்தன.

    இது தவிர ஸ்ரீமாருதி அக்ரோவ், நாமக்கல் சொசைட்டி ஆகிய நிறுவனங்களும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீதர்பாபு என்பவரும் ஒப்பந்த புள்ளி கொடுத்திருந்தனர். டெண்டர் திறப்பு நேற்று மாலை துறை இயக்குனர் முன்னிலையில் சென்னையில் நடந்தது. அப்போது கிறிஸ்டி குழுமத்தின் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்க கூடாது என்று மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனி தனியாக அழைத்து பேசிய அதிகாரிகள் டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.

    மேலும் விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்ட பல கோடி முறைகேடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எப்போது டெண்டர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இதில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளன. #EggNutritionCorruption #ITRaid
    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்ததில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Eggnutritioncorruption #ITRaid
    சேலம்:

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனம் வழங்கி வருகிறது.

    இது தவிர ஒப்பந்த அடிப்படையில், ரேசன் கடைகளுக்கு பருப்பு வினியோகமும் செய்து வருகிறது.

    கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 5-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 72 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் அவரது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பென் டிரைவ்களில் சத்துணவு முட்டை டெண்டர் விவகாரம், பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பட்டியல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்த போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை குமாரசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை எழுத்து பூர்வமாக எழுதி தரும் படி கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    முட்டை கொள்முதல், சத்து மாவு சப்ளையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் 5-வது நாளாக நடந்த சோதனை நேற்று நிறைவு பெற்றது. இந்த சோதனையில் 20 கோடிக்கு அதிகமான ரொக்கப்பணமும், 15 கிலோவுக்கு அதிகமான தங்க பிஸ்கட்டுகளும் வெளிநாட்டு கரன்சிகளும், கணக்கிட முடியாத அளவுக்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


    இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவியும் கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனால் காஷ்மீரில் பணிபுரிந்த அவரை தனது அரசியல் பலத்தை வைத்து குமாரசாமி நுகர்பொருள் கழக மேலாண் இயக்குனர் பதவி சுதாதேவிக்கு கிடைக்க செய்தார்.

    சுதா தேவி பதவிக்கு வந்த பிறகு தான் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் பல போலி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை போலி வங்கி கணக்குகள் மூலம் குமாரசாமி வெளிநாடுகளில் முதலீடு செய்தது ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குமாரசாமி, அவரது மனைவி நளினிசுந்தரி, மகள்கள் திவ்யா, கிறிஸ்டி ஆகியோரிடம் தனி தனியாக விசாரணை நடத்தினர். நிறுவனத்தின் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்வில் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போன் பேச்சு ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாமக்கல் முன்னாள் உயர் அதிகாரி உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாயை கமி‌ஷனாக கொடுத்ததாக தெரிந்தது. அந்த அதிகாரிகளிடம் விசா ரணை நடத்த சம்மன் அனுப்ப வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடமும் நேற்று தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மூலமே பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பவுண்ரி, நிட்டிங், கார்மெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் வைத்து முட்டை மற்றும் சத்துமாவு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு லஞ்ச பரிவர்த்தனைகள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    ×