search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் கோரிக்கை"

    • கடந்த இரண்டு வருடங்களாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மார்கணடேயன் நதி குறுக்கே கிராமங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மனுக்களை அளித்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நெடுசாலை கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

    இந்த கிராமத்தில் மார்க்கண்டேயன் நதி மறுகரையில் ஜே.ஜே.நகர், கண்ணப்பன் கொட்டாய், முத்துராமன் கொட்டாய், தண்டு மாரியம்மன் கோவில், காட்டு மாரியம்மன் கோவில் மற்றும் ஒட்டுக்கொட்டாய் என 6 கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் என விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறன்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றி மார்கண்டேயன் நதி, குப்தா நதி, மற்றும் ஸ்வர்ணமிகை நதிகள் வந்து நெடுசாலை கிராமத்தில் கலக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாக நதிகளில் நீர் இல்லாததால் கிராமமக்கள் ஆற்றில் இறங்கி பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நெடுசாலை கிராமத்திலிருந்து மறுகரையில் உள்ள 6 கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அந்த கிராமங்களில் இருந்து கிராம மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் மழைக்கா லங்களில் ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பதால் பொது மக்கள் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்லவும் மற்றும் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை அவசர காலத்திற்கு ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது 1000 ஏக்கர் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயராக உள்ள நிலையில் ஆற்றில் நீர் உள்ளதால் எந்திரங்களை கூட கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியமால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    இது குறித்து பல முறை கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டரிடம் மூன்று நதிகள் கூடும் மார்கணடேயன் நதி குறுக்கே கிராமங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மனுக்களை அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை மாவட்ட நடவடிக்கை எடுக்காததால் நேற்று நெடுசாலை கிராமத்தில் பெண்கள் உட்பட 6 கிராங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாலம் அமைப்பதற்கான பணிகள் அமைக்க நவடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×