search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் விழுந்த மேஸ்திரி மரணம்"

    கண்ணமங்கலம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்த மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி காசி மல்லி (வயது 50) என்பவர் கடந்த 11-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் மொபட்டை தள்ளிக்கொண்டு வந்தார்.

    அப்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் காசிமல்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார்.

    இது தொடர்பாக சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×