என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரி ஆறு வெள்ளப்பெருக்கு"
+2
- காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
பவானி:
காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்க தொடங்கியதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று ஓரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில் பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள ஒரு சிலர் தங்களது வீடுகளுக்கு வெள்ளத்தில் சென்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்