என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவலில் எடுத்து விசாரணை"
- காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
- 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணி புரியும் பெருந்துறையை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ண ங்குடியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் கன்னங்குடியை சேர்ந்த செல்வா என்கிற செல்வம் (வயது 27), விக்கி என்கிற விக்னேஷ் (வயது 24) ஆகி யோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து இவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் நேற்று விசாரணை நடப்பதற்காக போலீஸ் காவலில் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரி ப்பதற்காக பலத்த பாது காப்புடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்க ளது சொந்த ஊருக்கு போலீ சார் அழைத்து சென்றனர்.
- ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
- வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர்.
ஈரோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). பூட்டிய வீட்டுக்குள் புகுந்து திருடுவதில் கில்லாடி. இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஈரோடு மாநகர பகுதியில் 2 திருட்டு வழக்குகள், சித்தோட்டில் 2 திருட்டு வழக்குகளும் இவர் மீது உள்ளது.இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகரில் அவர் மீது பதிவாகியிருந்த திருட்டு வழக்கை விசாரிப்பதற்காக திருப்பதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஆந்திரா விரைந்து சென்றனர்.
பின்னர் சிறப்பு அனுமதி பெறப்பட்டு நேற்று முன்தினம் திருப்பதி ஈரோடுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஈரோடு மாநகரில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் அவர் திருடிய 10 பவுன் நகையை கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
அதன் பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர். ஒரு நாள் காவல் முடிவு அடைந்ததையடுத்து நேற்று மீண்டும் திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசாரிடம் வீரப்பன் சத்திரம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்