search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் நிதி திரட்டு"

    உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வருகின்றார். #PulwamaAttack #ConstableCollectingFund
    ராம்பூர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும்  தங்களால் முடிந்த உதவிகளை இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு செய்து வருகின்றனர்.  

    இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி திரட்டி வழங்கியது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஃபெரோஸ் கான், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனி ஆளாக ராம்பூர் பகுதியில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இது குறித்து ஃபெரோஸ் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரும்பினேன். இதற்காக 3 நாள் அனுமதி கேட்டு, அவர்களுக்காக நிதி திரட்டி வருகிறேன். என்னால் முடிந்தது இதுதான். எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்’ என்றார்.  #PulwamaAttack #ConstableCollectingFund
    ×