search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலாவதி பூச்சிகொல்லி மருந்து"

    பொன்னேரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நாலூர் ஏரிக்கரையில் பழைய குடோன் உள்ளது.

    இங்கிருந்து கடந்த சில நாட்களாக திடீரென பூச்சிகொல்லி மருந்து வாசனை வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமலும், உடல் நல பாதிப்பாலும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது தலைமையில் அதிகாரிகள் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு குவியல் குவியலாக ஏராளமான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் அதன் மீது புதிதாக லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். குடோனுக்கும் சீல் வைத்தனர்.

    இது தொடர்பாக குடோன் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங், காவலாளி ரஹீமின் ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடி வருகின்றனர்.

    ×