search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பரிசு"

    • 'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.
    • கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

    உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    • ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மதுரை வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மதுரை

    கடந்த 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வீரர் யார்? என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

    இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் சிறந்த வீரருக்கான கார் பரிசை, மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    காளைகளை வாடி வாசலில் திறந்து விட்டு, ஒரு வரலாற்றை உருவாக்கி, முதல் முதலாக அந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் பெயரில் கார் பரிசு வழங்குகிற முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த பெருமைக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்கரார் எடப்பாடி பழனிசாமி ஆவார்.

    2021-ம் ஆண்டு வழங்குகிற முதல் பரிசு காரை வழங்குவதற்கு, கோர்ட்டில் வழக்கு இருந்த காரணத்தால் தொடர்ந்து பாதுகாத்து வைக்கப்பட்டது. கண்ணன் என்கிற அந்த காளை பிடிவீரர் சிறந்த வீரராக ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மாடுபிடி வீரர் கண்ணனிடம் முதல் பரிசான கார் ஒப்படைக்கப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற வாடிவாசல் என்று சொன்னால் அது அலங்கா நல்லூர் வாடிவாசல் ஆகும். இந்த வாடிவாசலில் களம் காண்கிற அந்த காளைகளுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உண்டு. இந்த வாடிவாசலில் நடைபெறுகிற உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு ஒரு அரங்கத்துக்குள் அடக்கி விடுவார்களோ என்ற அச்சம் இன்றைக்கு இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    அது மட்டுமல்ல அலங்கா நல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிற இடம் வனப்பகுதி ஒட்டி அரசு இடமாக அது இருக்கிறது. ஒரு கால்நடை பண்ணை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 66 ஏக்கரில் உள்ள அந்த இடத்தில் குளம் இருக்கிறது. நீர்நிலைகளில் எப்படி அமைக்க முடியும்? அதுபோல அரசு வேலைவாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்க நிர்ணயம் செய்யப்படும், முழுமையாக செயல்படுத்தும் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

    விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகளும், அரசு வேலையும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பல வாக்குறுதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமைச்சராகி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிஇளைஞர்களை ஏமாற்றாமல் ஏதாவது அறிவிப்பு கொடுப்பாரா? அப்படி கொடுத்தால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
    • சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர், மண்டல தலைவர்கள் சுவிதா விமல், முகேஷ் சர்மா, புவனேஸ்வரி சரவணன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, புதூர் பூமிநாதன் மற்றும் ராஜ் சத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், எஸ்ஸார்கோபி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராகவன், ஈஸ்வரன், கவுன்சிலர் கருப்புசாமி டி.ஆர்.ஓ. பிர்தவுஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்ய ப்பட்ட 280 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 737 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.

    10சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 3 காளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.

    விதவிதமான பெயர்க ளில் அவிழ்க்க ப்பட்ட காளைகள் வீரர்க ளுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது.

    இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்று சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர்.

    போட்டியின் போது திறம்பட விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலைஅழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.

    17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரரான மதுரை அவனியாபுரம் கார்த்திக்கு 2-வது பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் மோட்டார் சைக்கிளும், 13 காளைகளை அடக்கிய 3-வது மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளை களான காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 2-வது சிறந்த காளையான வில்லாபுரம் கார்த்தி என்பவரது காளைக்கு வாஷிங்மெஷின் பரிசும், 3-வது பரிசாக மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரது காளைக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் போட்டியின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்ப ட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையா ளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.

    போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளை களின் உரிமையாளர் களுக்கும் பரிசுகோப்பை களும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

    போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வை யாளர்கள், 3சிறுவர்கள் காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயம டைந்தனர். அவர்களில் சிறுவர், போலீசார் உள்ளிட்ட 11பேர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×