search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி வரத்து"

    • உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று காய்கறி வரத்து 25 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
    • பனிப்பொழிவின் காரணமாக கருவேப்பிலை மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தினமும் 15 டன் அளவுக்கு காய்கறிகள் வந்த நிலையில் தற்போது உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று காய்கறி வரத்து 25 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது.

    பனிப்பொழிவின் காரணமாக கருவேப்பிலை மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கடந்த வாரத்தை விட குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதில் தக்காளி அதிகளவில் வருவதால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு வ.உ.சி.காய்கறிமார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை கிலோ கணக்கில் வருமாறு-

    கேரட்-60, பீட்ருட்-60, கத்திரிக்காய்-60, புடல ங்காய்-30, பீர்க்கங்காய்-40, பாவக்காய்-40, சுரைக்காய்-15, பச்சை மிளகாய்-50, பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40வரை, வெண்டை க்காய்-30,உருளைகிழங்கு-ரூ. 50,காலிபிளவர்-40, சின்னவெங்காயம்-80, பெரிய வெங்காயம்-40

    கறிவேப்பிலை கிலோ 70 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ. 140 முதல் ரூ. 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள், கீரைகள், பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளது. இங்கு பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்ட பலவற்றை விற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்ப ட்டது. விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் காய்கறி,பயிர் முகாம் நடத்திவிநியோ கிக்க ப்பட்டதுஇந்த ஆய்வின்போது பட்டுகோ ட்க்கடை தோட்ட க்கலை உதவி இயக்குனர் ராகினி, உழவர் சந்தை அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×