என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர் ரோந்து"
- ஒருவர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
- துப்பாக்கி, பைக் பறிமுதல்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையியலான வனத்துறை குழுவினர் நேற்று மாலை திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்குள்ள காப்புக்காட்டில் மான் ஒன்றை கும்பல் வேட்டையாடினர்.
வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர்.அதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் வேலூர் அடுத்த திருவலம் அருகே உள்ள ராமநாதபுரம் கிராத்தைச் சேர்ந்த சஞ்சீவி (35) என தெரியவந்தது.
வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் வனத்துறையினர் அவர்களிடமிருந்து 3 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை வன சரக அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:-
வன காப்பு காடுகளில் அத்து மீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடினாலோ குறிப்பாக மான் கறியை விற்றாலோ வாங்கினாலோ அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்